நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து | மாயமான மீனவர்கள்

 

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து | மாயமான மீனவர்கள்

ராமேஸ்வரம் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால், நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து. மாயமான 8 மீனவர்களைத் தேடி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி படகில் வந்து கொண்டிருந்தனர்.

ராமேஸ்வரம் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால், நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து. மாயமான 8 மீனவர்களைத் தேடி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி படகில் வந்து கொண்டிருந்தனர். மல்லிப்பட்டிணத்தில் இருந்து 15 நாட்டிக்கல் தூரத்தில் வந்த போது, திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால், படகு நடுக்கடலில் மூழ்கியது.

ramaeshwaram

இதனால் படகில் இருந்த 10 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களில் உமாகாந்த் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவர் மட்டும் கடலில் நீந்தியபடியே மல்லிப்பட்டிணம் வந்தடைந்தனர். படகில் பயணித்த மீதமுள்ள முனியசாமி, ரஞ்சித் குமார், மதன், இலங்கேஸ்வரன் உள்ளிட்ட 8 பேரும் நடுக்கடலில் சிக்கியுள்ளனர்.

fishermen

இதையடுத்து மாயமான மீனவர்கள் 8 பேரையும் கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்