நடிகை ஸ்ரீதேவி மரணம் கொலை தான்!? : கேரள டிஜிபி பரபரப்பு பேட்டி!

 

நடிகை ஸ்ரீதேவி மரணம் கொலை தான்!? : கேரள டிஜிபி பரபரப்பு பேட்டி!

நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்க  அதிக வாய்ப்பிருப்பதாகக் கேரள டிஜிபி தெரிவித்துள்ளார். 

கேரளா:  நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்க  அதிக வாய்ப்பிருப்பதாகக் கேரள டிஜிபி தெரிவித்துள்ளார். 

sridevi

நடிகை  ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காகத் துபாய் சென்ற நிலையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி குளியல் தொட்டியில் தவறி விழுந்து  உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

sridevi

இந்நிலையில் ஸ்ரீதேவி  இறப்பு குறித்து  கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கேரளகவ்முதி நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ‘ ஸ்ரீதேவி நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்கவே வாய்ப்பிருப்பதாக தன் நண்பனான தடயவியல் நிபுணர் டாக்டர் உமாநாதன் தன்னிடம் தெரிவித்தார். ஒருவர் எவ்வளவு போதையிலிருந்தாலும், ஒரு அடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை. ஒருவர் காலைப்பிடிக்க மற்றொருவர் தலையில் தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே ஒருவர் உயிரிழக்க முடியும் என்று என்னிடம் கூறினார். ஆனால் உமாநாதன் தற்போது உயிருடன் இல்லை’ என்றார். 

sridevi

ஸ்ரீதேவி உயிரிழந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் கேரள டிஜிபியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.