நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவிடம் வசியமானது இப்படி தான்…உண்மையை உடைத்த பிரபல எழுத்தாளர்

 

நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவிடம் வசியமானது இப்படி தான்…உண்மையை உடைத்த பிரபல எழுத்தாளர்

அந்தரங்க வீடியோ ஒன்று  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி அவரது மொத்த பெயரையும் டேமேஜ் செய்தது. 

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா விவகாரத்தில் ப்ளூ கார்னர் நோட்டீஸை இன்டர்போல் பிறப்பித்துள்ள நிலையில், அவரை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.  இதுவொருபுறமிருக்க, நித்தியானந்தா என்றாலே நமக்கு கூடவே தோன்றும் பெயர் நடிகை ரஞ்சிதா.  நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் அந்தரங்க வீடியோ ஒன்று  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி அவரது மொத்த பெயரையும் டேமேஜ் செய்தது. 

ttn

நித்தியின் அத்தனை ஆசிரமங்களுக்கும் ராஜமாதா நடிகை ரஞ்சிதா தான். டன்  கணக்கில் தங்க நகைககளை  வைத்துள்ளார், அவர் அசைவின்றி எந்த வேலையும் அங்கு நடக்காது என்றும்  முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க அவர் தான் மூளையாகச் செயல்படுவார் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகிறார்கள். 

ttn

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பரிச்சூரி கோபாலகிருஷ்ணா ரஞ்சிதா குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில்,  ‘எனது மகளும் ரஞ்சிதாவும் நல்ல தோழிகள் அவரிடம் நிறைய திறமைகள் இருப்பதை  அறிந்த நான்  கடப்பா ரெட்டம்மா படத்தில் அவரை நடிக்க வைத்தேன். ஒருமுறை ரஞ்சிதா என்னை சந்திக்க வந்தார். அப்போது நித்தியானந்தா புத்தகத்தை என்னிடம் கொடுத்து கருத்து கேட்டார். நான் அப்போது எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன். ஒருவேளை நான் அப்போதே அப்பெண்ணை எச்சரித்திருந்தாள்  அவர் இப்போது இந்த நிலையில் இருந்திருக்க மாட்டார் என்று நினைத்து அடிக்கடி வருந்துவேன். சினிமாவில் ரஞ்சிதா இன்னும் சிறந்த இடத்தை பிடித்திருக்கலாம். ஆனால்  அவர் தனது எதிர்காலத்தை இழந்துவிட்டார். அவரிடமிருந்த நல்ல விஷயங்களை மக்கள் மறந்துவிட்டார்கள் ‘ என்று கூறியுள்ளார். 

ttn

பொதுவாகவே ரஞ்சிதாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவரின் சென்னை சாலிகிராமம் மூன்று அடுக்குமாடி வீட்டின்,  ஒரு மாடியில் நூலகம் போன்று அமைத்து எண்ணிலடங்காத புத்தகங்களை வைத்திருந்தாராம். அதனால் புத்தகம் படிக்கும் பழக்கமே அவரை நித்தியானந்தா வலையில் வீழ்த்தியுள்ளது என்று அவரை அறிந்தவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.