நடிகை மல்லிகா ஷெராவத்தின் “பாம்பாட்டம்”…ராணியாக ஜீவனுடன் இணைகிறார்!

 

நடிகை மல்லிகா ஷெராவத்தின் “பாம்பாட்டம்”…ராணியாக ஜீவனுடன் இணைகிறார்!

வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவன்  ஹீரோவாக நடிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் வடிவுடையான் இயக்குகிறார்.  தயாரிப்பாளர் வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்கிறார். 

ttn

இந்நிலையில் இந்த படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ராணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயினுக்கு தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

tn

அம்ரீஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு யுகபாரதி பாடல் எழுதுகிறார். இப்படம் 5 மொழிகளில்  உருவாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.