நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கவுரவம்: குவியும் வாழ்த்து!
நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பிலும் சமூகசேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பிலும் சமூகசேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 2010 மற்றும் 2016 ஆண்டுகளில் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகப் பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டார். இதில் சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்ணியம் போன்றவை குறித்துத் தொடர்ந்து தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
So humbled. Thank u @UNICEFUSA for honouring me with the Danny Kaye Humanitarian Award at the #UNICEFSnowflake Ball in December! My work with @UNICEF on behalf of all the world’s children means everything to me..Here’s to peace freedom & the right to education #ForEveryChild pic.twitter.com/OZ4Qppc1y4
— PRIYANKA (@priyankachopra) June 12, 2019
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, யுனிசெப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இது குறித்து பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘என்னைக் கவுரவித்துள்ள யுனிசெப்புக்கு என் நன்றி. குழந்தைகளுக்கான என் சேவை தொடரும். குழந்தைகளின் எதிர்கால சுதந்திரம், கல்வி, பெண் உரிமை ஆகியவற்றிற்காக இந்த விருது போய்ச் சேரட்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.