நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமி, தாய் கைது: கதையே மாறி போச்சு; எப்படி தெரியுமா?

 

நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமி, தாய் கைது: கதையே மாறி போச்சு; எப்படி தெரியுமா?

நடிகை பானுப்பிரியா வீட்டில் 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாக வீட்டில் வேலை செய்த சிறுமி மற்றும் அவரது தாயை காவல்துறையினர் கைது செய்தனர்

சென்னை: நடிகை பானுப்பிரியா வீட்டில் 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாக வீட்டில் வேலை செய்த சிறுமி மற்றும் அவரது தாயை காவல்துறையினர் கைது செய்தனர்

80 மற்றும் 90களில் தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை பானுப்ரியா. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதிலிருந்து விலகிய அவர், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், பானுப்ரியா தனது வீட்டில் பணியாற்றும் சிறுமி சந்தியாவை கொடுமைப்படுத்துவதாக, அச்சிறுமியின் தாய் பிரபாவதி ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் பானுப்ரியா மீது வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக சிறுமியை பார்ப்பதற்காக, பானுப்பிரியா வீட்டிற்கு சிறுமியின் தாயார் வந்துள்ளார். இதனையடுத்து பானுப்பிரியா வீட்டில் இருந்து நகை, மற்றும் பணம் காணாமல் போனது. இதுகுறித்து பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் கடந்த மாதமே புகார் அளித்த நிலையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் சிறுமி மற்றும் தாய் பிரபாவதியிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் தந்ததாக சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இருவரும் பானுப்பிரியா வீட்டில் 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாகக் கூறப்படுகிறது.