நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

 

நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது

சென்னை: நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பானுப்ரியா. அவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி வருகிறார். கடைசியாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி புகார் வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு சிறுமியை பானுப்ரியா வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினாராம். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்தச் சிறுமிக்கு சேரவேண்டிய சம்பளம் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

“முறையாக என் மகளுக்கு சம்பளமும் தராமல், பாலியல் தொல்லை தருவதையும் கேள்விப்பட்டு அங்கு நேரில் சென்று கேட்டேன். அப்போது எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்’ என மிரட்டினார்கள்” என சிறுமியின் தாய் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி போலீஸ் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.