நடிகை த்ரிஷா டிவிட்டர் அக்கவுண்ட் முடக்கம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த த்ரிஷா
நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா சமூகவலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் பல்வேறு தரப்பினரையும் ஈர்த்தது. இதையடுத்து 96 படத்தின் நடிப்பில் அனைவரையும் அசரவைத்த த்ரிஷாவுக்கு ரசிகர்கள் பாராட்டு மழையை டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
Think my account is hacked guys. .Pls dont respond to any messages from me from my inbox .
— Trish Krish (@trishtrashers) October 20, 2018
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர் முடக்கிவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து குறுஞ்செய்திவந்தால் பதிலளிக்க வேண்டாம் என்றும் த்ரிஷா கேட்டுக்கொண்டுள்ளார்.