நடிகை தீபிகா படுகோன்- ரன்வீருக்கு டும் டும் டும் : அதிகாரபூர்வ அறிவிப்பு!

 

நடிகை தீபிகா படுகோன்- ரன்வீருக்கு டும் டும் டும் : அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி தீபிகா படுகோன்- ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் 2013இல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘ராம் லீலா’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் ஏற்பட்டதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. இதனால் இவர்கள் குறித்து பரபரப்புத் தகவல்கள்  அவ்வப்போது  கிளம்பிய வண்ணம் இருந்தது.  

ranveer

கடந்த ஜனவரி மாதம் தீபிகாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது  ரன்வீர் கபூரும், தீபிகாவும் ரகசியமாக மோதிரம் மாற்றிக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியது. ஆனால்  இதை மறுத்த தீபிகா திருமணம் பற்றிக் கண்டிப்பாக அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் திருமணம் வரும்  நவம்பர் மாதம் 14 மற்றும் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தீபிகா படுகோன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களது திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.