நடிகை தீபிகா படுகோனேவுக்கு கிறிஸ்டல் விருது!

 

நடிகை தீபிகா படுகோனேவுக்கு கிறிஸ்டல் விருது!

பிரபல ‌‌பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச கிறிஸ்டல் விருது வழங்கபட்டது. 

வோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் தீபிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், உலகில் பல கோடி மக்கள் மனநல பாதிப்பால் அவதியுற்று வருவதாகவும், பிற நோய்களை போல மனநல பாதிப்புக்கும் சிகிச்சையளிக்க முடியும் என்றும் கூறினார். மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை தவிர்க்க வேண்டும் என்றும், எப்போது சிரித்துப் பழக வேண்டும் என்றும் தீபிகா படுகோனே அறிவுரை வழங்கினார்.

deepika

அதன்பின் மேடையில் பேசிய தீபிகா, “மன அழுத்தம் அது ஒரு கொடிய நோய் நம்மை அழித்து விடும். இந்த கொடுமையை நானும் அனுபவித்து இருக்கிறேன்.  லைவ், லவ், லாப் என்பதை நான் ஆரம்பித்ததன் காரணமே நம்மால் ஒரு உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் தான்” என்று கூறினார்.