நடிகை ஜெயப்பிரதாவுக்கு வாரென்ட் -சாதாரண வாரென்ட் இல்லை ஜாமீன் இல்லாத வாரென்ட்..  

 

நடிகை ஜெயப்பிரதாவுக்கு வாரென்ட் -சாதாரண வாரென்ட் இல்லை ஜாமீன் இல்லாத வாரென்ட்..  

சலங்கை ஒலி, 47 நாட்கள் போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களின் ஒரு சமயம் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து, பிறகு அரசியலில் நுழைந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு கோர்ட் வாரென்ட் பிறப்பித்துள்ளது.

நடத்தை விதிகளை மீறியதற்காக ஜெய பிரதாவுக்கு எதிராக ஜாமீன் வழங்கப்படாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
சலங்கை ஒலி, 47 நாட்கள் போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களின் ஒரு சமயம் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து, பிறகு அரசியலில் நுழைந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு கோர்ட் வாரென்ட் பிறப்பித்துள்ளது.

jaya

உத்தரபிரதேசம் ராம்பூரில் 2019 ஆம் ஆண்டின் நடத்தை விதிகளை மீறிய வழக்கில் மூத்த நடிகையும்  பாஜகவின்  முன்னணி தலைவர்களில் ஒருவருமான  ஜெய பிரதாவுக்கு எதிராக ராம்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்காத வாரண்ட் பிறப்பித்துள்ளது.இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20 அன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது 

2019 மக்களவைத் தேர்தலின் போது ஜெய பிரதாவுக்கு எதிரான  நடத்தை விதிகளை மீறியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பொதுத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் ஆசாம் கான், ஜெய பிரதாவை நாடாளுமன்றத் தொகுதியிலில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
.