நடிகை கெளதமிகிட்டே கேட்டால் கமலைப் பற்றி தெரியும்… அமைச்சரின் ஆபாச பேச்சு!

 

நடிகை கெளதமிகிட்டே கேட்டால் கமலைப் பற்றி தெரியும்… அமைச்சரின் ஆபாச பேச்சு!

என்ன தான் எதிர்கட்சிகள் என்றாலும் மேல்மட்டத்தில் உள்ள தலைவர்களோ, பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களோ பொது இடங்களில் ஆபாச குப்பைகளை உளறிக் கொண்டிருக்காமல் நாகரிகம் காத்து வந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதி கூட ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் அநாகரிகமான வார்த்தைகளை உச்சரித்திருந்தாலும், காலப் போக்கில் நாகரிகம் காத்து வந்தார். ஆனால், சமீப காலங்களாய் தமிழக அரசியலில் கட்சித் தலைவர்கள் இடையேயும், பதவியில் இருக்கும் அமைச்சர்களிடத்திலும் இருந்து வெளிவரும் வார்த்தைகள் அருவருக்கத்தக்க, ஆபாச குப்பைகளாகவே இருக்கின்றன.

ஆட்சியில் இருப்பவர்கள் குற்றங்கள் செய்யும் போதும், குறைகளை எடுத்துக் காட்டும் போதும், அதைத் திருத்திக் கொள்ள முன்வருவதும், அதற்கான விளக்கங்களைக் கொடுப்பதும் தான் நாகரிகமான, ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும் என்று தான் இன்று தமிழகத்தில் இருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு அவற்றைத் தோற்றுவித்த தலைவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். கௌதமி

இந்நிலையில், நேற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள விதைப்பண்ணை அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய அமைச்சர் காமராஜ், பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், சுபஸ்ரீ விவகாரத்தில் அவர்களுடைய பெற்றோர்கள் ஸ்தானத்திலிருந்து அதிமுக அரசு ஆறுதல் கூறி செயல்படுகிறது. இதில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.மேலும், அதிமுக அரசை விமர்சனம் செய்யும் கமல்ஹாசனை பொருத்தவரை அவரைப் பற்றி கௌதமியிடமும், பெண்களிடமும் கேட்டால் தான் தெரியும் என்றும், பெண்கள் விவகாரத்தில் ‘சிகப்பு ரோஜா’ கமல் எங்களை விமர்சனம் செய்கிறாரா? எங்களுக்கும் கேள்வி எழுப்ப தெரியும்’ என பேசியிருக்கிறார்.