நடிகை குட்டி பத்மினி கைதாகிறாரா? சீரியல்களைத் தயாரிப்பதிலும் சிக்கல்

 

நடிகை குட்டி பத்மினி கைதாகிறாரா? சீரியல்களைத் தயாரிப்பதிலும் சிக்கல்

சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கும் எல்.ஐ.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமில்லாத நிலத்தினை நடிகை குட்டி பத்மினி வேறொருவருக்கு 2012ம் ஆண்டில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்த விஷயம் அறிந்த இடத்தின் ஒரிஜினல் உரிமையாளர், நடிகை குட்டி பத்மினி மீது அப்போது காவல் துறையில் நில மோசடி புகார் கொடுத்துள்ளார். 

சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கும் எல்.ஐ.சி. நகரில் உள்ள தனக்கு சொந்தமில்லாத நிலத்தினை நடிகை குட்டி பத்மினி வேறொருவருக்கு 2012ம் ஆண்டில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்த விஷயம் அறிந்த இடத்தின் ஒரிஜினல் உரிமையாளர், நடிகை குட்டி பத்மினி மீது அப்போது காவல் துறையில் நில மோசடி புகார் கொடுத்துள்ளார். 

இந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால், காவல்துறையினர் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் OS: 36/2012 என்ற எண்ணில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையில் நடிகை குட்டி பத்மினி போலி ஆவணங்களை வைத்து இந்த நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நடிகை குட்டி பத்மினி கைது செய்யப்படலாம் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சின்னத்திரை தயாரிப்பாளர்களின் சங்கத்தின் விதிமுறை படி, தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பாளர்கள் மீது எந்த ஒரு கிரிமினல் வழக்கும் இருக்க கூடாது என்பது விதி என்று  சொல்லப்படுகிறது. அப்படி கிரிமினல் வழக்கு ஏதாவது இருந்தால், அந்த சங்கம் அவர்கள் டிவி சீரியல்களைத்  தயாரிக்க ஒத்துழைப்பைத் தராது. நடிகை குட்டி பத்மினி தொடர்ந்து பல மொழிகளில் டிவி சீரியல் தயாரித்து வருகிறார். குட்டி பத்மினி மீது உள்ள இந்த கிரிமினல் வழக்கு பற்றி டிவி சீரியல் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரியுமா? இதன் காரணமாக குட்டி பத்மினி டிவி சீரியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.