நடிகைக்கு பேஸ்புக்கில் பாலியல் தொல்லை: இளைஞர் கைது!

 

நடிகைக்கு பேஸ்புக்கில் பாலியல் தொல்லை: இளைஞர் கைது!

கொல்கத்தாவில் உள்ள கர்பா பகுதியை சேர்ந்த முகேஷ் ஷா என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

நடிகைக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காள மொழி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வருபவர் பிரபல வங்காள நடிகை அருணிமா கோஷ்.  இவருக்கு கடந்த 30 ஆம் தேதியிலிருந்து பேஸ்புக்கில் ஒருவர் ஆபாசப் படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார்.

arunima

இதுகுறித்து அருணிமா கோஷ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தெற்கு கொல்கத்தாவில் உள்ள கர்பா பகுதியை சேர்ந்த முகேஷ் ஷா என்ற இளைஞரைக் கைது செய்தனர். இவர், முகேஷ் மயுக் என்ற ஃபேக் ஐடியில் இருந்து நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

 

arunima

இது குறித்து கூறும் நடிகை அருணிமா கோஷ்,  ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.ஆனால்  என் தினசரி நடவடிக்கைகளைக் கவனித்துக் கூறி வந்ததுடன் என்னை மிரட்டவும் செய்தான் அதனால் தான் போலீசில் புகார் செய்தேன்’ என்று கூறியுள்ளார். 

arunima

கைதான முகேஷ் ஷாவிடம் எதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்றும் அல்லது அவருக்கு ஏதேனும் மனரீதியான பிரச்னை உள்ளதா? என்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.