நடிகர் ஷாருக் கான் மீது கருப்பு மை தெளிப்போம்: கலிங்க சேனா அமைப்பினர் மிரட்டல்!

 

நடிகர் ஷாருக் கான் மீது கருப்பு மை தெளிப்போம்: கலிங்க சேனா அமைப்பினர் மிரட்டல்!

உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்காக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஒடிசா வரும் நிலையில் அவர் மீது  கருப்பு மை தெளிப்போம் என்று கலிங்க சேனா என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

ஒடிசா: உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்காக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஒடிசா வரும் நிலையில் அவர் மீது  கருப்பு மை தெளிப்போம் என்று கலிங்க சேனா என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

ஷாருக் கான் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அசோகா. வரலாற்றுத் திரைப்படமான இதில் கலிங்கப்போர் பற்றிய காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி கலிங்க சேனா என்ற அமைப்பு அப்போது போலீசில் புகாரளித்தது. பின்னர், அந்தப் பரபரப்பு அப்படியே அடங்கிப்போனது.

sharuk khan

இந்நிலையில், ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் வரும் 27-ம் தேதி உலகக்கோப்பை ஹாக்கி தொடர் தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஷாருக் கானுக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஷாருக் கான் வருகை  உறுதியாகியுள்ளது.

தற்போது மீண்டும் அசோகா திரைப்பட விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள கலிங்க சேனா அமைப்பினர் , ஷாருக் கான் அசோகா படத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியதுடன் விமான நிலையம் முதல் மைதானம் வரை எந்த இடத்திலும், ஷாருக் கான் முகத்தில் கருப்பு மை வீசப்படும், கருப்புக் கொடிகள் காட்டப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளதுள்ளனர்.