நடிகர் விஷால் மீது நடிகர் இயக்குநர் பாக்யராஜ் பரபரப்பு புகார்!

 

நடிகர் விஷால் மீது நடிகர் இயக்குநர்  பாக்யராஜ் பரபரப்பு  புகார்!

நடிகர் விஷால் மீது பாக்யராஜ் அணியினர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

சென்னை:  நடிகர் விஷால் மீது பாக்யராஜ் அணியினர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணியும்’ களமிறங்கியுள்ளது. இதற்காக இரு அணியினரும்  பல முன்னணி  நடிகர் நடிகைகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.  இந்த தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபன் வழிநடத்தவுள்ளார். 

bagyaraj

இந்நிலையில் தேர்தல் அதிகாரியிடம் நடிகர் விஷால் மீது பாக்யராஜ் அணியினர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.  இது குறித்துக் கூறியுள்ள நடிகரும் இயக்குநருமான  பாக்யராஜ்,  தேர்தல் அதிகாரி மூலம் வெளியாக வேண்டிய தகவல்கள் அனைத்தும் விஷால் மூலம் தெரியவருகிறது. இது குறித்து நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றார். 

vishal

இது குறித்துக் கூறும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,  தேர்தலை விஷால் நடத்துகிறாரா அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி நடத்துகிறாரா..? என்று எங்களுக்குத் தெரியவில்லை. வாக்குச் சீட்டு விவரங்கள் விளம்பரப் பலகையில் ஒட்டவில்லை. அதற்குள் 1,100 தபால் ஓட்டுக்கள் வந்துவிட்டதாக  விஷால் கூறுகிறார். எனவே இதுகுறித்து விளக்கம் கேட்கவே புகார் அளித்துள்ளோம்’ என்றார்.