நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

 

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

 இதுதொடர்பாக விஜய் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். 

பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக சமீபத்தில்  ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள், அன்பு செழியன்  வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.பின்பு மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமானவரித்துறையினர்  நடிகர் விஜய்யிடம்  விசாரணை நடத்தினர்

 

இதையடுத்து  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும்  பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 23 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.  இதுதொடர்பாக விஜய் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். 

rn

இந்நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.  மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் நடந்த விசாரணை தொடர்ந்து.இந்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.