நடிகர் விஜய் பற்றி அவதூறு பேச்சு.. அர்ஜுன் சம்பத்துக்கு போஸ்டர் அடித்து எச்சரிக்கை விடுத்த விஜய் ரசிகர்கள்!

 

நடிகர் விஜய் பற்றி அவதூறு பேச்சு.. அர்ஜுன் சம்பத்துக்கு போஸ்டர் அடித்து எச்சரிக்கை  விடுத்த விஜய் ரசிகர்கள்!

சினிமாவில் நடிப்பவர்கள் தங்களை சினிமாவில் மட்டும் நல்லவர்களாகக் காட்டிக் கொண்டு பஞ்ச் டயலாக் பேசுகின்றனர்.

கடந்த 5 ஆம் தேதி காலை திடீரென பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம், நடிகர் விஜய் வீடு, கல்பாத்தி எஸ்.அகோரம் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அன்புச் செழியன் வீட்டில்  77 கோடி ரூபாய் ரொக்கமும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியது.

ttn

மேலும், அவர் 165 கோடி ரூபாய்க்கு வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருந்தது அம்பலமானது. விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றாலும் கல்பாத்தி எஸ்.அகோரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிகில் படத்தின் சம்பளம் தொடர்பாக முக்கிய ஆவணம் சிக்கியதாகத் தகவல் வெளியானது. அதனால், இவர்கள் அனைவருக்கும் வருமான வரித்துறை விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது. 

ttn

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சினிமாவில் நடிப்பவர்கள் தங்களை சினிமாவில் மட்டும் நல்லவர்களாகக் காட்டிக் கொண்டு பஞ்ச் டயலாக் பேசுகின்றனர். ஆனால், உண்மையில் விஜய் வரிஏய்ப்பு செய்துள்ளார்.” என்று கூறினார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால், விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அர்ஜுன் சம்பத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ttn

திருச்சியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில், விஜய் குறித்து அவதூறாகப் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று திருச்சி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் இணைய தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அர்ஜுன் சம்பத் ரஜினிகாந்த்துக்கு ஆதரவாகவும், விஜய்க்கு எதிராகவும் பேசியதால் விஜய் ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.