நடிகர் விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது!
சுமார் 200 பேர்கள் அங்கு திரண்டதால், பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார், தடுத்து நிறுத்தி கைது செய்தது
நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வணிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ‘மண்டி’ என்ற தனியார் ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் நடித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து கூறிய வணிக போராளி கொளத்தூர் த.ரவி, சிறுகுறு வியாபாரிகளைப் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் பணம் வாங்கி கொண்டு நடித்து அவர்களுக்குத் துணை போயுள்ள விஜய் சேதுபதியைக் கண்டிப்பதாகவும், அவரது அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தைத் தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். விஜய் சேதுபதிக்கு எதிராக பதாகைகள், கோஷங்கள் சுமார் 200 பேர்கள் அங்கு திரண்டதால், பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார், தடுத்து நிறுத்தி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.