நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு செல்வது தற்கொலைக்கு சமமானது – பொன். ராதா விமர்சனம்! 

 

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு செல்வது தற்கொலைக்கு சமமானது – பொன். ராதா விமர்சனம்! 

காங்கிரஸ் கட்சிக்கு வர நடிகர் விஜய்க்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்த நிலையில் அக்கட்சிக்கு விஜய் செல்வது தற்கொலைக்கு சமமானது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு வர நடிகர் விஜய்க்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்த நிலையில் அக்கட்சிக்கு விஜய் செல்வது தற்கொலைக்கு சமமானது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது திமுக தலைவர் ஸ்டாலினின் தூண்டுதலாலேயே நடந்தது. அதற்கு ஆர்.எஸ் பாரதி வருத்தம் தெரிவித்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தூண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 

pon radhakrishnan

இஸ்லாமியர்கள் உட்பட எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் நாட்டைவிட்டு வெளியேற்ற பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை. வதந்தியை பரப்பி, கலவரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது திமுக. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டத்திற்கு திமுகவே காரணம். நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று அந்த கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். நடிகர் விஜய்யை  தற்கொலைக்கு சமமான வி‌ஷயத்தை செய்ய தூண்டுகிறார் அழகிரி” என விமர்சித்தார்.