நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன்! அரசியல் பேச அவருக்கு அனைத்து உரிமையும் உண்டு-  பொன்.ராதாகிருஷ்ணன்

 

நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன்! அரசியல் பேச அவருக்கு அனைத்து உரிமையும் உண்டு-  பொன்.ராதாகிருஷ்ணன்

விஜய் அரசியல் கருத்தை கூறக்கூடாது என யாரும் கூற முடியாது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

விஜய் அரசியல் கருத்தை கூறக்கூடாது என யாரும் கூற முடியாது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் தேச ஒற்றுமை என்ற தலைப்பில் ஒரே தேசம் ஒரே சட்டம் 370 – 35 A சட்டப்பிரிவு நீக்கம் குறித்து மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதா கிருஷ்ணன், “நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன். அவர் அரசியல் கருத்தை கூறக் கூடாது என யாரும் கூற முடியாது. உண்மையான அரசியல் கருத்துகளை சொன்னால் யாருக்கும் வருத்தம் கிடையாது, அனைவருக்கும் மகிழ்ச்சியே

pon radha krishan

கடந்த ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆட்சி எந்த அளவுக்கு வேகமாக செயல்பட்டதோ அதைவிட பல மடங்கு அதிகமாக கடந்த 100 நாட்களில் செயல்பட்டுகொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்திற்கு உண்டான வேகம் அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது. கீழடியில் நடந்து கொண்டிருப்பது அனைத்தும் வெளிப்படையான விஷயம். மத்திய அரசால் என்னவெல்லாம் உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறோம். கீழடி என்பது தமிழர்களின் பெருமைகளில் ஒன்று அது எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மத்திய அரசு முழுக்கமுழுக்க துணையாக இருக்கும்
” என்று கூறினார்.