நடிகர் விஜய்- அட்லீ கூட்டணி: சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் விஜய்?உண்மை நிலவரம் என்ன?

 

நடிகர் விஜய்- அட்லீ கூட்டணி: சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் விஜய்?உண்மை நிலவரம் என்ன?

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சிபிஐ அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சிபிஐ அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி, கத்தி படங்களையடுத்து சர்கார் படத்தில் இணைந்தது விஜய் – முருகதாஸ் கூட்டணி. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகி  சர்ச்சைகளை சந்தித்த நிலையில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. 

சர்காரை அடுத்து   இயக்குநர் அட்லீயின் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில்  ‘விஜய்யை சி.எம் ஆக வைத்து படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?’எனக் கேட்கப்பட்ட போது, ‘ஆளப்போறான் தமிழன்’ என அட்லீ சொன்னதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தற்போது அட்லீ  – விஜய் இணையும் படம் முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும், இப்படத்தில் விஜய் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.