நடிகர் விஜயின் கோரிக்கைக்கு தலை சாய்த்த தேர்தல் ஆணையம்…ரசிகர்கள் மகிழ்ச்சி!

 

நடிகர் விஜயின் கோரிக்கைக்கு தலை சாய்த்த தேர்தல் ஆணையம்…ரசிகர்கள் மகிழ்ச்சி!

சர்கார் பட பாணியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தனது வாக்கை செலுத்தியுள்ளார். 

சென்னை: சர்கார் பட பாணியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தனது வாக்கை செலுத்தியுள்ளார். 

விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் சர்க்கார். முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. 

sarkar

அதுமட்டுமின்றி, 49P சட்டப்பிரிவைப் பயன்படுத்தினால், கள்ள ஓட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற வலுவான ஒரு யோசனையை இத்திரைப்படம் முன் வைத்தது. 

sarkar

இந்நிலையில் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் சர்க்கார் படத்தில் நடந்து போன்ற நிகழ்வு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்… நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுள்ளார்.  அதைத்தொடர்ந்து  மணிகண்டனுக்கு 49p தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது தான் உண்மையான சர்கார் என்று விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

இதையும் படிங்க: விமர்சனம் ‘வெள்ளைப் பூக்கள்’…ரசிகர்களை வேட்டையாடி விளையாடும் இரண்டு விவேக்குகள்…