நடிகர் லாரன்ஸை விடாமல் துரத்தும் ஸ்ரீரெட்டி: ஆட்டம் கண்டுள்ள மாஸ்டரின் அஸ்திவாரம்!?

 

நடிகர் லாரன்ஸை விடாமல் துரத்தும் ஸ்ரீரெட்டி: ஆட்டம் கண்டுள்ள மாஸ்டரின் அஸ்திவாரம்!?

காஞ்சனா 3 வெற்றிக்காக நடிகர் ராகவா லாரன்ஸுக்கு   நடிகை ஸ்ரீரெட்டி வாழ்த்து  தெரிவித்துள்ளார். 

சென்னை:  ‘காஞ்சனா 3’ வெற்றிக்காக நடிகர் ராகவா லாரன்ஸுக்கு   நடிகை ஸ்ரீரெட்டி வாழ்த்து  தெரிவித்துள்ளார். 

தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார். 

lawrence

அப்படிப்பட்ட ரெட்டி புயலில்  சிக்கிய ஒருவர் தான் நடிகரும் இயக்குநருமான  ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் தனக்கு படவாய்ப்பு அளிப்பதாகக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று ஸ்ரீரெட்டி குற்றம் சுமத்த, லாரன்ஸோ அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, நடிக்கவும் வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து காஞ்சனா 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியிடம் ஆசி வாங்க மும்பை பறந்த  அவர் காஞ்சனா இந்தி ரீமேக்கின் பணிகளையும் துவக்கியுள்ளார்.

srireddy

இந்நிலையில் மும்பைக்குச் சென்ற லாரன்ஸ் வாழ்க்கையில் மீண்டும் ஸ்ரீரெட்டி என்ற புயல் அடிக்க துவங்கியுள்ளது. ஆந்திராவில் வைக்கப்பட்டுள்ள ‘காஞ்சனா 3’ படத்தின் பேனரை ஃபோட்டோ எடுத்து, பேஸ்புக்கில்  பதிவு செய்த ஸ்ரீரெட்டி, ‘ மாஸ்டரின் ‘காஞ்சனா 3’ வெற்றிக்கு எனது வாழ்த்துகள். உங்கள் படத்தில் நடிக்க நான் காத்திருக்கிறேன். உங்களில் எத்தனைப்பேர் என்னை மாஸ்டரின் படத்தில் பார்க்கக் காத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார்.

 

ஒருவேளை வாய்ப்பு தராவிட்டால் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விடுவாரோ என்ற எண்ணத்தில் லாரன்ஸ் ஆட்டம் கண்டுள்ளார்.