நடிகர் மாதவனுக்கு வந்த சிக்கல் என்னவென்று தெரியுமா?

 

நடிகர் மாதவனுக்கு வந்த சிக்கல் என்னவென்று தெரியுமா?

நடிகர் மாதவன் போனை எடுக்க முடியாமல் சிக்கலில் இருப்பதாக கூறியுள்ளனர்

சென்னை: நடிகர் மாதவன் போனை எடுக்க முடியாமல் சிக்கலில் இருப்பதாக கூறியுள்ளனர்.

நடிகர் மாதவன் தனது அடுத்தப் படமாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையைப் படமாக எடுக்கிறார். நம்பிநாராயணன் ராக்கெட் ரகசியங்களை அந்நிய நாட்டுக்கு விற்பனை செய்ததாகச் சொல்லி அவர் மீது பல ஆண்டுகள் வழக்கு நடந்தது போலீஸ் அவரை மூன்று மாதங்கள் சிறையில் அடைத்து சித்தரவதை செய்தது. பிறகு உச்சநீதிமன்றம் அவர் குற்றமற்றவர் என்று கூறி, அவரை விடுதலை செய்தது. அதோடு பொய்யான வழக்கை போட்டதால் கேரளா காவல்துறை நம்பி நாராயணனுக்கு ஐம்பது  லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டது. 

இந்நிலையில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனின் வாழ்க்கையைக் கதையாக எடுக்க திட்டமிட்டு, அவரிடம் உரிமையை வாங்கினார். இதற்காக அவருக்கு முப்பது லட்சம் ரூபாயும், படத்தின் கேரள உரிமையையும் கொடுத்தார் மாதவன். ‘ராக்கெட்ரி’ என்று பெயரிட்டு மாதவனே நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்க முடிவு செய்தார். படம் முதல் கட்டத்தை தொடங்க இருந்த நேரத்தில் படத்தின் இயக்குநராக இருந்த ஆனந்த் மகாதேவன் என்பவர் மாதவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படக்குழுவிலிருந்து விலகிக்கொண்டார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அவர் விலகியது மாதவனுக்கு ஷாக். அதனால் அவரே இயக்குநராக மாற முடிவு செய்து விட்டார். 

நம்பிநாராயணன் வேடத்தை மேக்கப் போட வெளிநாட்டிலிருந்து ஆட்களை வரவழைத்தார். அவர்களும் தத்ரூபமாக மேக்கப் போட்டு விட்டனர். மாதவன் தனது போனில் பாஸ்வேர்ட் ஆகத் தனது முகத்தைத்தான் வைத்திருந்தார். இப்போது வேஷம் போட்டுவிட்டு போனை எடுத்தால் போன் இவரது முகத்தை டிடெக்ட் செய்ய மறுக்கிறதாம். இதனால் வேஷம் போட்ட பிறகு போனை எடுக்க முடியாமல் சிக்கலில் இருக்கிறார் மாதவன்.