நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரில் போட்டி

 

நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட இருக்கிறார்.

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட இருக்கிறார்.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கவுரியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பிரகாஷ் ராஜ், பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும், இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சனம் செய்தார். 

மேலும் தான் வாங்கிய 5 தேசிய விருதுகளை திருப்பி தர தயங்கமாட்டேன் எனவும் கொந்தளித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பல மேடைகளில் இந்துத்துவத்திற்கு எதிராகவும், பாஜக, மோடிக்கு எதிராகவும் அதிரடியாக பேசி வந்தார். இதனையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் எனவும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில்  பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.