நடிகர் பார்த்திபன் மீது காவல் நிலையில் பரபரப்பு புகார்!

 

நடிகர் பார்த்திபன் மீது காவல் நிலையில் பரபரப்பு புகார்!

நடிகர் பார்த்திபன் மீது அவரிடம் பணியாளராக பணியாற்றிய, ஜெயம்கொண்டான் என்பவர் கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளார்.

தனது ‘ஒத்தச் செருப்பு சைஸ் 7’பட ஆடியோ ரிலீஸுக்கான வேலைகளில் பிசியாக இருக்கும் நடிகர், இயக்குநர் ரா.பார்த்திபன் மீது திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர் கொலை முயற்சி வழக்கு தொடுத்துள்ளார்.

சில மாதங்கள் முன்புவரை சென்னையில் உள்ள கே.கே.நகரில் பார்த்திபனின் அலுவலகம் இருந்தது. இந்த அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் ‘கவிஞர் கிச்சன்’ என்ற பெயரில் ஜெயங்கொண்டான் என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார். அவர் திரைப்படங்களில் பாடல்களும் எழுதி வந்தார். 

மேலும் பார்த்திபனின் ’கோடிட்ட இடங்களில் நிரப்புக’ படத்திலும்  ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இவரின் ஓட்டலுக்கு பார்த்திபன் அடிக்கடி சாப்பிட வருவதாக  சொன்ன ஜெயங்கொண்டான்,ஒரு கட்டத்தில்  பார்த்திபனிடமே உதவியாளராக சேர்ந்துள்ளார்.  பார்த்திபனின் அலுவலகம் மற்றும் வீடு தற்போது திருவான்மியூர் மேற்கு காமராஜர் நகரில் உள்ளது.

parthiban

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு  இவர் வீட்டில் சமீபத்தில் நகைகளை மர்மநபர்கள் திருடிவிட்டதாக திருவான்மியூர் போலீசில் பார்த்திபன் புகார் அளித்திருந்தார். அதற்காக கவிஞர் ஜெயங்கொண்டான் உட்பட பார்த்திபன் வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.  

kavinjar

 

திருட்டுக்கு காரணமானவர்கள் யார் என்று இதுவரை போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், பார்த்திபன் தன்னிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஜெயங்கொண்டானை பணியிலிருந்து நீக்கியுள்ளார்.அதனால் ஆத்திரமுற்ற ஜெயங்கொண்டான்,  தன்னை வேலையில் இருந்து ஏன் நிறுத்தினீர்கள்? என்று நியாயம் கேட்பதற்காக பார்த்திபனின் திருவான்மியூர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தின்போது ஜெயங்கொண்டானை பார்த்திபன் அலுவலகத்தின் மாடியிலிருந்து தள்ளிவிட பார்த்ததாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.