நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் மாயம்!
பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமானதையடுத்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமானதையடுத்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் தமிழ் சினிமாவில் இமேஜ் பெற்ற இவரை கலாய்ப்பதற்காகவே சமூகவலைதளங்களில் எப்போதும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும்.
இந்நிலையில், நண்பரை பார்க்கச் சென்ற நடிகர் பவர் ஸ்டார் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி ஜூலி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பவர் ஸ்டாரின் சொத்துக்களை தங்களது பெயரில் எழுதி வைக்கக் கூறி மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் ஜூலி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜூலியின் புகாரை ஏற்று போலீசார் விசாரணை நடத்தியதில், சொத்து விவகாரம் காரணமாக தான் ஊட்டியில் இருப்பதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பப்ளிசிட்டிக்காக பவர் ஸ்டார் கெத்தி காட்டியதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.