“நடிகர் நடிகையின் பெயருக்கு களங்கம்”-   ஊடகத்தில் உருவாகும் போலி கணக்குகள்…உஷார் ! 

 

“நடிகர் நடிகையின் பெயருக்கு களங்கம்”-   ஊடகத்தில் உருவாகும் போலி கணக்குகள்…உஷார் ! 

27 வயதான ஒரு ராஜஸ்தான் நடிகையும், சினிமாவுக்கு நடிகர் நடிகைகளை புக் பண்ணும்  ஏஜென்ட் ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அந்த ஏஜென்ட் ஒரு சினிமா புள்ளியான தக் என்பவரிடம் 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

மும்பையில்  ஒரு நடிகையின் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்கை உருவாக்கி, அதில் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை வெளியிட்ட 28 வயதான ஒருவரை ஓஷிவாரா போலீசார் கைது செய்துள்ளனர். 

27 வயதான ஒரு ராஜஸ்தான் நடிகையும், சினிமாவுக்கு நடிகர் நடிகைகளை புக் பண்ணும்  ஏஜென்ட் ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அந்த ஏஜென்ட் ஒரு சினிமா புள்ளியான தக் என்பவரிடம் 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்த பணத்தை ஏஜென்ட் திருப்பி தராததால் அவரின் நண்பரான நடிகையிடம் அவர் பணத்தை கேட்டார். ஆனால் நடிகையோ எனக்கும் பணத்துக்கும் சம்பந்தமில்லை என்று கை விரித்துவிட்டார்.

mumbai

இதனால் கடுப்பான அந்த சினிமா புள்ளி தக் நடிகையின் பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான கணக்கை திறந்து அதில் நடிகையின் ஆபாச படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து திடுக்கிட நடிகை இது பற்றி சைபர் க்ரைம் போலீசில் அவர் மீது புகாரளித்தார். போலீசார் விசாரித்து அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.