நடிகர் ஜெயம் ரவி மேலாளர் மீது மோசடி புகார்!

 

நடிகர் ஜெயம் ரவி மேலாளர் மீது  மோசடி  புகார்!

நடிகர் ஜெயம் ரவியின் மேலாளர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று  அளிக்கப்பட்டுள்ளது

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் மேலாளர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று  அளிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகர் ஜெயம் ரவியின் வீடு மற்றும் அலுவலகம் சென்னையில் உள்ளது. இதில்  அலுவலகத்துக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருவர்  பணியில் சேர்க்கப்பட்டனர்.  இதையடுத்து இருவரையும் கடந்த ஏப்ரல் மாதம் ஜெயம் ரவி வேலையை விட்டு நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.  

ravi

இந்நிலையில் அலுவலக பாதுகாப்புப் பணியிலிருந்த இருவருக்கும் கடந்த 4 மாதங்கள் ஆகியும் சம்பள பாக்கி தரவில்லையாம்.  இதுகுறித்து செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஜெயம் ரவியின் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த இருவருக்கும்   தரவேண்டிய சம்பளம் ரூ. 70 ஆயிரம் ரூபாயை  தராமல் மோசடி செய்துள்ளனர் என்றும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ravi

இப்புகாரின் பேரில் ஜெயம் ரவியின்  மேலாளர் சேஷகிரியை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.