நடிகர் சிவகுமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள செல்போனை இழந்த இளைஞர்!

 

நடிகர் சிவகுமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள செல்போனை இழந்த இளைஞர்!

நடிகர் சிவக்குமார் தமக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என செல்போனை இழந்த இளைஞர் தெரிவித்துள்ளார். 

மதுரை: நடிகர் சிவக்குமார் தமக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என செல்போனை இழந்த இளைஞர் தெரிவித்துள்ளார். 

மதுரையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது ராகுல் என்பவர் செல்ஃபி எடுத்த போது ஆத்திரம் அடைந்த சிவக்குமார் அந்த செல்போனை கீழே தள்ளிவிட்டதில் உடைந்தது. இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி  விவாதத்திற்குள்ளாகியது.

இதையடுத்து நடிகர்  சிவக்குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ராகுல், நடிகர் சிவக்குமார் புதிய செல்போன் வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்,  புதிய செல்போன் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.