நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ 

 

நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ 

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகர் சத்யராஜ் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

சென்னை: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகர் சத்யராஜ் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் கைதாகி பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட ஏழு பேர்,கடந்த 28 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவர்களின் விடுதலை குறித்து இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவொரு தீர்மானவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, கோவையில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் பயணம் செய்யவிருக்கிறார் அற்புதம்மாள். ‘இந்த விஷயத்தில் , அவருக்கு நாம் உறுதுணையாக நின்று, அந்த ஏழுபேர் விடுதலையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறி நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கொண்டுள்ளார்.