நடிகர் சங்க தேர்தல்: துணை முதல்வரை சந்தித்த பாண்டவர் அணி! 

 

நடிகர் சங்க தேர்தல்: துணை முதல்வரை சந்தித்த பாண்டவர் அணி! 

சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. அதில் பாண்டவர் அணியை எதிர்த்து இந்த முறை சுவாமி சங்கரதாஸ் அணி களமிறங்கவுள்ளது. அதையொட்டி தபால் வாக்குகள் தற்போதே வர தொடங்கியுள்ளன. தேர்தலில் 3 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்க உள்ள நிலையில், ஆயிரத்து 45 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர். தபால் வாக்கு அளிக்கும் உறுப்பினர்களுக்கு வாக்குச் சீட்டுகள் கடந்த 17ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டன. 

இதில், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பாண்டவர் அணியினர் சந்தித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அந்த சந்திப்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடிகர் நாசர், நடிகைகள் கோவை சரளா, சச்சு, மற்றும் நடிகர் ராஜேஷ் ஆகியோர் உடன் சென்றனர். 

சந்திப்பு முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாசர், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு கேட்டோம். மேலும் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து துணை முதல்வர் கேட்டு தெரிந்து கொண்டார். தேர்தலுக்கு பாதுகாப்பும் கோரியுள்ளோம். நாங்கள் வேறு எதுவும் பேசவில்லை’ என்று கூறியுள்ளார்.