நடிகர் சங்க தேர்தலில் திமுகவின் தலையீடு- ராதாரவி பகிரங்க குற்றச்சாட்டு!!

 

நடிகர் சங்க தேர்தலில் திமுகவின் தலையீடு- ராதாரவி பகிரங்க குற்றச்சாட்டு!!

நடிகர் சங்கம் தேர்தலில் திமுக தலையீடு இருக்கிறது என நடிகர் ராதா ரவி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

நடிகர் சங்கம் தேர்தலில் திமுக தலையீடு இருக்கிறது என நடிகர் ராதா ரவி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ராதாரவி அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நயன்தாரா குறித்து தரக்குறைவாக பேசவில்லை. பேசவில்லை என்றாலும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டேன். இதற்காக திமுகவில் இருந்து என்னை நீக்கியது தவறு. திமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை இருக்கிறது. 

நீதிபதி பத்மனாபன் நடிகர் சங்க தேர்தல் கடந்த முறை சரியாக நடத்தவில்லை. நடிகர் சங்கம் பொறுப்பில் இருக்கும்போது என் மீது இருக்கும் காஞ்சிபுரம் நில மோசடி வழக்கை எதிர் கொள்வேன். இப்போது பொறுப்பில் இருக்கும் விஷால் மீதும் மோசடி வழக்கு இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் திமுக தலையீடு உள்ளது. இதனை திமுகவில் இருக்கும்போது தெரிந்துகொண்டேன்.” எனக் கூறினார்.