நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை: அக்காவாக மாறிய அண்ணி

 

நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை:  அக்காவாக மாறிய அண்ணி

ஜோதிகா, கார்த்தி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: ஜோதிகா, கார்த்தி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

karthi

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவ் திரைப்படம் எதிர்பார்த்தளவு வரவேற்பைப் பெறவில்லை.  தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி’  படத்தில் நடிக்க கார்த்தி நடித்து வருகிறார். 

jo

இந்நிலையில் நடிகர் கார்த்தியும் அவரது அண்ணியான நடிகை ஜோதிகாவும் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இந்த  த்ரில்லர் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதால், இருவருக்குமான கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர். ஆனால்  தற்போது அந்த குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கிறது. ஆம். கார்த்தியும் ஜோதிகாவம்  அக்கா – தம்பியாக நடிக்கவுள்ளனர். இதனால் முதன்முறையாகத் திரையில் இவர்களைப் பார்க்க  ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் இணைந்துள்ளார்.

jeethu

முன்னதாக அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: அவன் ரத்தத்திலேயே ஸ்டைல் இருக்கு: நெகிழும் சவுந்தர்யா ரஜினிகாந்த்