நடிகர் உதயநிதியின் அடுத்த பட நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது!

 

நடிகர் உதயநிதியின் அடுத்த பட நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது!

உதயநிதி ஸ்டாலின்னின் அடுத்த படத்தில் நடிகை ஆத்மிகா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது

சென்னை: உதயநிதி ஸ்டாலின்னின் அடுத்த படத்தில் நடிகை ஆத்மிகா  நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிமிர் படத்தினை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடித்திருக்கும் “கண்ணே கலைமானே” திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமன்னா சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், வெற்றிக்குமாரன் போன்ற ஏராளமானோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படமான “கண்ணை நம்பாதே” திரைப்படம் நடித்துவருகிறார். அதில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழா ஆதி ‘மீசையை முறுக்கு’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.

aathmika

மேலும் இத்திரைப்படத்தை அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கிவருகிறார். இவருடைய முதல் படம் போலவே இந்த படமும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதும், சாம் சிஎஸ் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.