நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை!

 

நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை!

அதிமுகவிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார். மேலும் ஆளும் அதிமுகவைக் கடுமையாகச் சாடி வந்தார்

பிரபல நடிகர் ஆனந்த ராஜ் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவின் உறுதியான ஆதரவாளராக இருந்த  நடிகர் ஆனந்த ராஜ்  ஜெயலலிதா மீது கொண்ட அன்பால் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

 திவீர விசுவாசியாக இருந்து அதிமுகவுக்காகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மனமுடைந்து அதிமுகவிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார். மேலும் ஆளும் அதிமுகவைக் கடுமையாகச் சாடி வந்தார்

 

இந்நிலையில்  நடிகர் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை  புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரில்  வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஏலசீட்டு நடத்திவந்த நிலையில் அதில் ஏற்பட்ட சில குளறுபடியால் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு  தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கனகசபை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் நடிகர் நடிகர் ஆனந்த ராஜ் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.