நடிகர்களை பாதுகாக்க கண்காணிப்பு குழு: நடிகர் விஷால் அறிவிப்பு!

 

நடிகர்களை பாதுகாக்க கண்காணிப்பு குழு: நடிகர் விஷால் அறிவிப்பு!

நடிகர்களை பாதுகாக்க தென்னிந்திய நடிகர் சங்கம் கண்காணிப்பு குழு ஒன்றை உருவாக்கும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர்களை பாதுகாக்க தென்னிந்திய நடிகர் சங்கம் கண்காணிப்பு குழு ஒன்றை உருவாக்கும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில், ஏற்கனவே கவிஞர் வைரமுத்து, நடிகர் அர்ஜுன், நடிகர் ராதாரவி, பாடகர் கார்த்திக், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் உள்ளிடோர் சிக்கினர். இதையடுத்து  நடிகைகளுக்கு உள்ள பாலியல் பிரச்சினை குறித்து விசாரிக்க நடிகர் சங்கம் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று நடிகைகள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

vishal

இந்நிலையில்  நடிகர்களின் பாதுகாப்பை தீவிரமாய் கவனிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என நடிகர்  விஷால் அறிக்கை விடுத்துள்ளார். கலைஞர்கள் சுதந்திரமாக, சுயமரியாதையாகப் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.