’நடக்கப்போகாத நடிகர் சங்கத் தேர்தலுக்கு எதுக்கு இத்தனை பில்ட் அப்பு?’…யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் வைக்கும் ராதாரவி…

 

’நடக்கப்போகாத நடிகர் சங்கத் தேர்தலுக்கு எதுக்கு இத்தனை பில்ட் அப்பு?’…யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் வைக்கும் ராதாரவி…

விஷால், பாக்யராஜ் அணிகள் வேட்புமனு தாக்கல் செய்து ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி வீச ஆரம்பித்திருக்கும் நிலையில் ‘வர்ற 23ம் தேதி தேர்தலே நடக்கப்போறதில்ல. அப்புறம் ஏன்யா இப்பிடி அடிச்சிக்கிறீங்க’என்று பேரதிர்ச்சி அளிக்கிறார் வில்லன் ராதாரவி.

விஷால், பாக்யராஜ் அணிகள் வேட்புமனு தாக்கல் செய்து ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளி வீச ஆரம்பித்திருக்கும் நிலையில் ‘வர்ற 23ம் தேதி தேர்தலே நடக்கப்போறதில்ல. அப்புறம் ஏன்யா இப்பிடி அடிச்சிக்கிறீங்க’என்று பேரதிர்ச்சி அளிக்கிறார் வில்லன் ராதாரவி.

நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இன்னும் சரியாக இரண்டு வாரங்களே உள்ளன. கடந்த இரு தினங்களாக விஷால் அணியினரும், பாக்யராஜ் அணியினரும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு கட்டீ முடிக்கப்படாத நடிகர் சங்கக்கட்டிடம் குறித்து ஏக்கப்பட்ட கட்டுக்க்தைகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நடிகர்  ராதாரவி,”கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டப்போது மாற்றம் மாற்றம் என்று புழுகியபடியே பதவிக்கு வந்தார்கள். ஆனால் மிஞ்சியதென்னவோ ஏமாற்றம் தான்.இதுவரை நடத்திய எந்த கலைநிகழ்ச்சிக்கும் விஷால், நாசர் கோஷ்டியினர் கணக்கே கொடுக்கவில்லை. ஒரு முறை என்னிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக நாசர் பொய் சொன்னார். அப்படியானால், நீங்கள் உண்மையான முஸ்லீம் என்றால் குரான் மீது சத்தியம் செய்யுங்கள் என்று நாசரிடம் கூறினேன். அடுத்து அவர் அந்தப் பேச்சையே நிறுத்திக்கொண்டார். அவர்களது எல்லாப்பேச்சுகளுமே இந்த வகையான புழுகல்தான்.

தேர்தல் நடைபெற வாய்ப்பில்லைஎன்று  எஸ்.வி.சேகர் காரணம் இல்லாமல் சொல்லவில்லை. அவர் சொன்னதையே  இப்போது நானும் சொல்கிறேன். புகார் கொடுக்கவேண்டியவர்களிடம் அத்தனை விபரங்களையும் ஒப்படைத்துவிட்டோம்.  தேதி அற்வித்தபிறகு கட்டிட வேலைக்கு நடிகர் கார்த்தி ஒரு கோடி நன்கொடை அளித்தது உட்பட இந்தத் தேர்தல் நடைபெறாமல் இருக்க ஏகப்பட்ட விதிமுறை மீறல்கள் உள்ளன. எனவே அவற்றை விசாரிக்கும்போது விஷாலும் நாசரும் அம்பலப்பட்டு நிற்பார்கள். எனவே வரும் 23ம் தேதி நடிகர் சங்கத்தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை’என்று குண்டு மழை பொழிகிறார் ராதாரவி. லைஃப்ல வில்லன் ரோலைத் தவிர வேற எதுவுமே பண்ற ஐடியா இல்லையா ராதாரவி சார்?’