நகைக்கடையில் மிளகாய்ப்பொடி வீசி 6 சவரன் நகை கொள்ளை: போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி?

 

நகைக்கடையில் மிளகாய்ப்பொடி வீசி 6 சவரன் நகை கொள்ளை: போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி?

நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய்கொடி வீசி, 6 சவரன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய்கொடி வீசி, 6 சவரன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் அருகே  ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரி என்ற பெயரில் பக்தாராம் சவுத்ரி என்பவர் நகைக் கடை நடத்தி வந்தார். அந்த கடைக்கு, கடந்த மாதம் 30-ஆம் தேதி நகை வாங்குவது போல் வந்த நபர் ஒருவர், தயாராக கொண்டு வந்த மிளகாய்ப்பொடியை எடுத்து கடை உரிமையாளர் முகத்தில் வீசி 6 சவரன் நகைகளை திருடிக் கொண்டு ஓடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட திருவொற்றியூர் போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். இந்நிலையில், அண்ணாமலை நகர் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் சந்துருவை இன்று போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

அதன்பின், அவனிடம் இருந்த 6 சவரன் நகைகளை மீட்ட போலீசார், அதை நகைக்கடை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.