தோல்வி பயத்தில் ஜோதிமணிக்கு கொலை மிரட்டல்; கத்தியை காட்டிய இளைஞர்களால் பரபரப்பு?

 

தோல்வி பயத்தில் ஜோதிமணிக்கு கொலை மிரட்டல்; கத்தியை காட்டிய இளைஞர்களால் பரபரப்பு?

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. பாஜக கூட்டணியால் அதிமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் பொதுமக்கள். தோல்வி பயத்தில் அதிமுக வேட்பாளர் எம்பி தம்பிதுரை கொலை மிரட்டல் விடுப்பதாக ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி பிரசார வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி. அப்படி பிரசாரம் செய்யப்போன இடத்தில் ஜோதிமணியை வரவேற்க மக்கள் கூட்டம் திரளாக இருந்திருக்கின்றனர்.

jothimani

அங்கு இரு இளைஞர்கள் இங்கெல்லாம் வரக்கூடாது என தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியுள்ளனர். அதில் ஒருவன் கத்தி எதுக்கு வச்சிருக்க, எடுத்து குத்துடா என்று கூறியுள்ளார். அந்த இளைஞன் கத்தியை எடுத்ததால் அங்குள்ள மக்கள் பதறிப் போயிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்த சிலர், அந்த இளைஞர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

தோல்வி பயத்தில் அதிமுக எம்பி தம்பிதுரையும், விஜய பாஸ்கருக்கும் இந்த செயலை செய்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். அந்த இளைஞர்களின் பேஸ்புக் பக்கத்தை பார்த்தாலே அவர்களை யார் அனுப்பியிருப்பார்கள் என்பது தெரியும் என திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி கூறினார். அந்த இரு இளைஞர்கள் மீது காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். தேர்தலி வெற்றிபெற எந்த எல்லையையும் கடக்க தயாராகிவிட்டது எடப்பாடி அரசாங்கம் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க: ஷு பாலிஷ், இளநீர் விற்பனை: மன்சூர் அலிகானின் நூதன பிரசாரம்!