தோனி இல்லாத வாய்ப்பை பயன்படுத்துங்கள்: வீரர்களுக்கு ரோஹித் ஷர்மா அறிவுரை!

 

தோனி இல்லாத வாய்ப்பை பயன்படுத்துங்கள்: வீரர்களுக்கு ரோஹித் ஷர்மா அறிவுரை!

தோனி இல்லாத வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இளம் வீரர்களுக்கு ரோஹித் ஷர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

கொல்கத்தா: தோனி இல்லாத வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இளம் வீரர்களுக்கு ரோஹித் ஷர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனால், 20 ஓவர் போட்டி தொடரை வெல்ல வேண்டும் என மேற்கிந்திய தீவுகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இது போன்ற சூழலில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள அணித் தலைவர் ரோஹித் சர்மா, “தோனி இல்லாதது அணியின் நடுவரிசைக்கு இழப்பு தான் என்ற போதிலும் தங்களின் திறமையை நிரூபிக்க தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்று அறிவுரை கூறியுள்ளார்.