‘தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயர் தூக்கு போட்டுட்டு செத்துடுவான்’ : கதறி அழும் சிறுவனின் வைரல் வீடியோ!

 

‘தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயர் தூக்கு போட்டுட்டு செத்துடுவான்’ : கதறி அழும் சிறுவனின் வைரல் வீடியோ!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்  தோனி அவுட் ஆனதால், சிறுவன் கதறி அழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

சென்னை:  ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்  தோனி அவுட் ஆனதால், சிறுவன் கதறி அழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

csk

ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியான  இறுதிப் போட்டி  ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.  பரபரப்பான திக்…திக் நிமிடங்களுக்கு மத்தியில் மும்பை  அணி 1 ரன்  வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. வெற்றி பெற்ற  மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

dhoni

இதனிடையே பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட இறுதி ஆட்டத்தில் தோனி  ரன் அவுட் ஆனார். அவுட் இல்லை என்று நினைத்திருந்த நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 3-வது நடுவர் தோனிக்கு அவுட் வழங்கினார். மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட அவுட் என்றும் கருத்து கூறி வருகின்றனர். 

 

இந்நிலையில் தோனி அவுட் ஆனதால் சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூகவலைதளங்களில்  வெளியாகியுள்ளது. அதில், சிறுவனின் அம்மா அவனுக்கு சமாதானம் சொல்ல, அதை ஏற்க மறுத்த சிறுவன், ‘தோனி அவுட்டே இல்ல , அவுட்டுன்னு குடுக்குறான். மூணாவது அம்பயர்  தூக்கு போட்டுக்கிட்டு செத்துடுவான்’ என்று கூறிக்கொண்டே தேம்பி தேம்பி அழுகிறான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.