தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா உபயோகம் சட்டப்பூர்வமாக்கப்படும் – மணிப்பூர் முதலமைச்சர்

 

தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா உபயோகம் சட்டப்பூர்வமாக்கப்படும் – மணிப்பூர் முதலமைச்சர்

கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

கஞ்சா விற்பனை செய்வது, உபயோகிப்பது சட்டப்படி குற்றம். கஞ்சா வைத்திருந்தால் உடனடி கைதுதான். தற்போது கஞ்சாவை மருந்து பொருளாக சட்டப்படி விற்பனை செய்ய வேண்டும் என அண்மைகாலமாக பலர் அறிவுறுத்திவருகின்றனர். மேலும் அண்மைக்கால ஆய்வுகள் கஞ்சா தாவரத்தில் காணப்படும் செயல் ஊக்கப் பொருட்களைப் பிரித்தெடுத்துள்ளன. இவை வாந்தியை தடுக்கக் கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Ganja

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், “மருத்துவம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா உபயோகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து அமைச்சரவையில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். ஏற்கனவே அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கஞ்சா பயன்பாடு  மருத்துவ நோக்கத்திற்காக சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.