தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார்: ராகுல் காந்தி

 

தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார்: ராகுல் காந்தி

தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அமேதி: தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக தன்னுடைய தொகுதியான அமேதிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி குறித்து ராகுல், விவசாயிகள் எப்போதும் இல்லாத அளவு பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆனால் மோடியோ தன் தொழிலதிபர் நண்பர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார். விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாமல் தொழிலதிபர்களுக்கு உதவுவதை கடமையாக கொண்டுள்ளார். ஹாலிடம் இருந்த ரபேல் விமான ஒப்பந்தத்தை தன் நண்பர் அம்பானியிடம் மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தை வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கொடுத்தார். ரபேல் ஊழல் சிபிஐக்கு வரும் என்ற அச்சத்தில்தான் அலோக் வர்மா நீக்கத்தில் ஆர்வம் காட்டினார் என ராகுல் கூறினார்.

மேலும் அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மோடி போல் அல்லாமல் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தெரிவித்தார்.