தொற்றுநோய் சூழலை பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டுவர மோடி அரசு திட்டம்! – தொல் திருமாவளவன் எச்சரிக்கை

 

தொற்றுநோய் சூழலை பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டுவர மோடி அரசு திட்டம்! – தொல் திருமாவளவன் எச்சரிக்கை

கொரோனா நோய்த் தொற்று சூழலைப் பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை அவசர சட்டமாக கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதை கைவிட வேண்டும், அதேபோல் அகவிலைப் படி உயர்வு ரத்தை கைவிட வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று சூழலைப் பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை அவசர சட்டமாக கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதை கைவிட வேண்டும், அதேபோல் அகவிலைப் படி உயர்வு ரத்தை கைவிட வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக்கூடாது விடுதலைச் சிறுத்தைகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரூ.21 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு நிதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அவர்களுக்குரிய அகவிலைப்படியை பிடித்தம் செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையது இல்லை. எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமருக்கான புதிய வீடு கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே புல்லட் ரயில் திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படியான திட்டங்களை நிறுத்திவைத்து அதைப் பயன்படுத்தினாலே ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக உதவி செய்ய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆடம்பரத் திட்டங்கள் எதையும் நிறுத்திவைக்க முன்வராத மோடமி அரசு இப்போது ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியைப் பறித்து உத்தரவிட்டுள்ளது. இதை ரத்து செய்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்.
மோடி அரசு பதவியேற்றதும் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்துவிட்டு, ஐந்து சட்டங்களாக அறிவிப்ப செய்தது. அந்த சட்டத் தொகுப்புகளாக புதிய சட்டங்களைக் கொண்டு வரும் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

fsctory-workers-67

இந்த மசோதாக்களை அவசர சட்டங்களாக பிறப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு இருந்த பல்வேறு பாதுகாப்புக் கூறுகள் அகற்றப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இத்தகைய மக்கள் விரோத சட்டங்களை அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன. மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தற்போதைய தொற்றுநோய் சூழலை பயன்படுத்தி தொழிலாளர் உரிமையைப் பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளது தெளிவாகிறது. இந்த முயற்சிகளை மோடி அரசு கைவிடாவிட்டால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.