தொண்டர்கள் தான் என் முதல் கடவுள்.. அவர்களுக்காக மீண்டு வருவேன் : விஜயகாந்த்தின் உருக்கமான பேச்சு !

 

தொண்டர்கள் தான் என் முதல் கடவுள்.. அவர்களுக்காக மீண்டு வருவேன் : விஜயகாந்த்தின் உருக்கமான பேச்சு !

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தேமுதிக சார்பில் சென்னை கொரட்டூரில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தேமுதிக சார்பில் சென்னை கொரட்டூரில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பொதுமக்களுடன் இணைந்து விஜயகாந்த், பிரேமலதா மற்றும் தேமுதிகவின்  துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் பொங்கல் வைத்துக் கொண்டாடி, மக்களுக்குப் பரிசுப் பொருட்களையும் வழங்கினர். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, குடியுரிமை சட்டத்திற்கு எதிராகச் சிலர் குரல் எழுப்புகின்றனர். இந்தியா ஒரு இந்து நாடாக இருந்தாலும், அதில் வாழும் இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர் என்று கூறினார். 

ttn

அதனைத்தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. அடுத்து வரும் நகர்ப்புற தேர்தலிலும் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் மேடையில் பேசிய விஜயகாந்த், நான் குணமாகி வர வேண்டும் என்று மக்கள் பிரார்த்திக்கின்றனர். அவர்கள் தான் என் முதல் கடவுள். விரைவில் அவர்களுக்காக மீண்டு வருவேன் என்று கூறி பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.