தொட்டதற்கு எல்லாம் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?: சூர்யா அதிரடி கேள்வி 

 

தொட்டதற்கு எல்லாம் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?: சூர்யா அதிரடி கேள்வி 

நடிகர் சூர்யா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்த விஷியங்களில் அவ்வப்போது செயல் பட்டுவருகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்த விஷியங்களில் அவ்வப்போது செயல் பட்டுவருகிறார். அதுமட்டுமின்றி அவரின் அகரம் அறக்கட்டளை சார்பில் கல்வி சம்மந்தமாக இல்லாதவர்களாக்கு உதவி செய்து வருகிறார். 

இந்த நிலையில் அகரம் அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும். புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை.

ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும். 5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள்  பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை. ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். கலை அறிவியல் கல்லூரியில் சேர புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத்தேர்வு உள்ளது.

கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது. 50 ஆயிரம் கல்லூரிகளை 12 ஆயிரம் கல்லூரிகளாக குறைக்க முயற்சி நடக்கிறது.  கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறைத்தால் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளார்.