தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 

தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 
தொடர்ந்து மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

rain

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 
தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும்  வடதமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலில் குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மூன்று நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.