தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது…

 

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது…

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அமெரிக்கா-சீனா வர்ததகம் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியது, ஈரான்-அமெரிக்கா பதற்றம் தணிந்தது  போன்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது.

இன்போசிஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், மாருதி, அல்ட்ராடெக்சிமெண்ட், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் ஏசியன்பெயிண்ட்ஸ் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி மற்றும்  டைட்டன் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.சி,ஐ.சி.ஐ. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,428 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,127 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.67 லட்சம் கோடியாக உயர்ந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.37 புள்ளிகள் உயர்ந்து 41,599.72 நிறுவன பங்குகளின் விலை புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 40.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,256.80 புள்ளிகளில் நிலை கொண்டது.